ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உரையாற்றினார். அப்போது அவர், “இந்தக் கூட்டத்தொடர் வெறும் சட்டமன்ற சம்பிரதாயம் மட்டுமல்ல, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.