தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலக்குழுவுக்கு நீட்டிப்பு அளிக்காதது ஏன் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமிபிரியா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர்களின் நலனை பேணவும், அவர்களுக்கான திட்டங்களை கண்காணிக்கவும், ஆலோசணை வழங்கவும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒருமுறை நலக்குழு மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இறுதியாக 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு திருத்தி அமைக்கப்பட்டு 2020 மார்ச் வரை செயல்பட்டு முடிவுற்றது.