சென்னை: “மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இன்று (ஏப்.16) சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாநில உரிமைகளை பாதுகாத்ததற்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கு வலிமையான குரல் எழுப்பியதற்கும் முதல்வருக்கு பாராட்டும் வாழ்த்து தெரிவித்தார்.