கோவை: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரையை இணைத்து தமிழக முதல்வருக்கு கோவையை சேர்ந்த 43 தொழில் நிறுவனங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளன.
மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க தொழில் அமைப்புகள் சார்பில் சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்தது. கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, டீகா, கிரெடாய், ஆர்டிஎப், ஓஸ்மா, டேப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில ஜிஎஸ்டி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.