சென்னை: மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று யு-19 மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மயிலாப்பூர் கிளப்பை சேர்ந்த என்.ஷர்வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்கில் எஸ்.வர்ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஹன்சினி (சென்னை), நந்தினி (எம்விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), புவனிதா (மதுரை), வர்னிகா (ஈரோடு) ஆகியோரும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.