‘மார்கோ’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை பார்த்துவிட்டு திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது சூர்யாவும் படம்பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் நாயகன் உன்னி முகந்தன் மற்றும் ஹனிஃப் அடினி ஆகியோருக்கு பூங்கொத்து அனுப்பி தனது வாழ்த்தை பகிர்ந்திருக்கிறார்.