ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜுன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தில் இந்த தடை அமலில் இருக்கும். இதனால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழங்குறைந்த பகுதிகளில் நங்கூரமிடப்பட்டுள்ளது.