சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. நீதிமன்ற ஒப்புதலை அடுத்து பல்கலை. மசோதாக்கல் சட்டமானதன் மூலம் துணைவேந்தர் நியமன அதிகாரம் அரசின் வசம் சென்றது. துணைவேந்தர் நியமன அதிகாரம் அரசின் வசம் சென்றுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.