மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு திமுக தரப்பில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசியல் வாதிகள் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் குற்றம்சாட்டியிருந்தார். வணிக லாபத்துக்காக தமிழ் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுபவர்கள் இந்தி மொழியை படிக்க வேண்டும் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.