சென்னை: “தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அதனை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 3 மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் எனக் கூறி வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘எங்களுக்கு இரு மொழிக் கொள்கையே போதும்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவருகிறார். அதோடு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.