சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு இரவில் திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், நந்தனம் தனியார் மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.