Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மூட நம்பிக்கை – மனித குலம் எங்கே செல்கின்றது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
இந்தியாகலாச்சாரம்சிந்தனைக் களம்

மூட நம்பிக்கை – மனித குலம் எங்கே செல்கின்றது

EDITOR

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் நரபலி சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித குலம் எங்கே செல்கின்றது என்ற கேள்வியும் அழுத்தமாக எழுந்துள்ளது. முக்கியமாக, நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் மாமிசத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டது கொடூரத்தின் உச்சக்கட்டம். அறிவியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடு முன்னேறி உள்ள நிலையில், நரபலி உள்ளிட்ட விஷயங்கள் நடப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நடந்துள்ள நரபலி சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அதிரடி நடவடிக்கையை கேரளா அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பேய் ஓட்டுதல் மற்றும் பில்லி சூனியம் வைத்தல் உள்ளிட்ட செயல்களில் போலி மந்திரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதை உண்மை என பொதுமக்கள் நம்பி, போலி மந்திரவாதிகளிடம் ஏமாறுகின்றனர். குறிப்பாக, அறிவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றிற்கு தொடர்பு இல்லாத நரபலி, பேய் ஓட்டுதல், பில்லி சூனியம் வைத்தல் ஆகியவை மூட நம்பிக்கை தான் என்பதை மக்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக, பணம் அதிகமாக கிடைக்கும் மற்றும் புதையல் இருப்பதாக கூறி அவ்வப்போது நரபலி உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, வீட்டில் உள்ள குடும்ப தலைவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால், நரபலி கொடுக்கப்படும் கோர சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கடந்த காலங்களை விட தற்போது மூட நம்பிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், முழுமையாக குறையவில்லை என்பது தான் ேவதனை. மூட நம்பிக்கை விஷயத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

படிப்பறிவு இருந்தும் மூடநம்பிக்கை மீது மக்கள் நம்பிக்கை கொள்வது ஏன்? உளவியல் ரீதியாக அவர்கள் எப்படி மாறுகின்றனர். முக்கியமாக, பொருளாதார ரீதியாக அவர்கள் பின்னடைவை சந்திக்கும் போது, மூட நம்பிக்கை மீது அதீத நம்பிக்கை கொள்கின்றனர். இது கொலையில் முடிகிறது. கேரளாவில் நடந்துள்ள நரபலி சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நிலையில், மனித மாமிசத்தை மனிதர்களே உண்ட சம்பவம் கோரத்தின் உச்சம். இவ்விஷயத்தில் அதிரடி நடவடிக்கையை கேரளா அரசு எடுக்க வேண்டும்.

தற்போது, நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை பார்க்கும் போது மூட நம்பிக்கையை ஒழிப்பது எளிதான காரியம் அல்ல. மூட நம்பிக்கையை மேலும் ஊக்குப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலுக்கு ஒவ்வாத எந்த ஒரு விஷயத்திலும் பொதுமக்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
  • வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் மாநகராட்சி, நகராட்சிகளில் வெள்ள அபாய பகுதிகளில் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • நாடாளுமன்ற தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினாருக்காக பணப்பட்டுவாடா செய்ய 20 கிலோ தங்க கட்டிகள் விற்றது அம்பலம்
  • சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னை ஓபன்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
  • படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு
  • மிசோரமில் தஞ்சமடைந்த 3000 மியான்மர் அகதிகள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்

You Might Also Like

இந்தியாபொதுவானவை

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையும், இந்திய அரசின் நகர்வுகளும் – ஒரு பார்வை

May 7, 2025
இந்தியா

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

July 15, 2025
இந்தியா

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: 35 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

July 16, 2025
இந்தியா

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?