சென்னை: வரும் அக்டோபர் மாதம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்த சூழலில் இதற்கான நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அர்ஜெண்டினா அணியின் பயணம் ரத்து ஆகியுள்ளது.
ரூ.30 கோடியை அர்ஜெண்டினா அணியின் வசம் முன்பணமாக கொடுத்து கேரள மாநில அரசு ஒப்பந்தம் செய்ய தவறி உள்ளது. கேரள மாநில அரசும், ஸ்பான்சர்களும் இதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததே அர்ஜெண்டினா அணியின் இந்திய பயணம் ரத்தாக காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.