புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவால் பணியினை இழந்த முறைகேடு புகாரில் சிக்காத மேற்கு வங்க ஆசிரியர்கள் பணிகளில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதிய ஆசிரியர்களின் நியமனங்களை டிச.31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, "தற்போதைய மனுவில் உள்ள கோரிக்கைகள், 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளின் ஆசிரியர்கள் தொடர்புடையதாக இருப்பதால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். புதிய ஆசிரியர் நியமனங்களுக்கான விளம்பரம் மே 31-ம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு, நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.