மாஸ்கோ: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை அதிக அளவில் வேலையில் சேர்க்க ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்தியாவில் திறமையான மனிதவளம் உள்ளது. எனவே, ரஷ்ய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியர்களை பணியமர்த்தி வருகின்றன.