கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு கட்டுப்படுத்த தவறியதால், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக நாளை (சனிக்கிழமை) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஎச்பி தலைவர் அலோக் குமார், "மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான கொடூரமான கொலை, கலவரம், தீ வைப்பு, வன்முறை, கொள்ளை மற்றும் பெரிய அளவிலான இடப்பெயர்வு சம்பவங்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன. வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிகப் பெரிய அளவில் நடக்கின்றன.