புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்காக அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. ராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் சுமார் 2,500 ஊர்வலங்கள் நடைபெற்றன. பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலங்களுக்காக ஏராளமான மக்களைத் திரட்டினர்.
முஸ்லிம் பகுதிகளை இந்த ஊர்வலங்கள் கடக்கும்போது இருபுறமும் திரண்ட முஸ்லிம்கள் இனிப்புகள் விநியோகம் செய்தனர். மேலும், குடிக்க தண்ணீரும் வழங்கினர். மால்டாவில், முஸ்லிம்கள் இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பக்தர்கள் மீது பூக்களும் தெளித்து மதநல்லிணக்கத்தைக் காட்டினர். கொல்கத்தாவில் மட்டும் ராம நவமி அன்று 60-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன,