புதுடெல்லி: மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கும் திட்டம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் உத்தரவாதத்தை நம்பிய டெல்லி பெண்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் அடிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இன்று (பிப். 22) அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பாரதிய ஜனதா கட்சியின் மிக உயர்ந்த தலைவரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி, கடந்த மாதம் 31-ம் தேதி துவாரகாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பாஜக அரசு அமைந்த பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று டெல்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம் என சொன்னார்.