வாஷிங்டன்: "நான்(ஜியார்ஜியா மெலோனி), இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அர்ஜெண்டினா அதிபர் சேவியர் மிலே ஆகியோர் உலக அளவில் ஒரு புதிய பழமைவாத இயக்கத்தை கட்டமைத்து வழிநடத்தி வருகிறோம் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாட்டில் காணொலி வாயிலாக மெலோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் இடதுசாரிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களின் எரிச்சல் வெறியாக மாறியுள்ளது. பழமைவாத தலைவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சர்வதேச அளவில் ஒத்துழைத்து பணியாற்றி வருவதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த 90-களில் பில் கிளிண்டன் (முன்னாள் அமெரிக்க அதிபர்), டோனி பிளேர் (இங்கிலாந்து பிரதமர்) இணைந்து சர்வதேச அளவில் ஒரு இடதுசாரி வலையமைப்பை உருவாக்கிய போது அவர்கள் ராஜதந்திரிகள் என்று அழைக்கப்பட்டனர்.