புதுடெல்லி: பாஜகவில் டெல்லி சட்டபேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெய் பைஜயந்த் பாண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவை டெல்லியில் அரியணை ஏற்றியிருக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.