புதுடெல்லி: யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி, இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை, 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை வீரர்கள் சந்தித்துப் பேசினர்.