
விக்ரம் கே குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த கதைகளை பல்வேறு நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

