ரஷ்ய தாக்குதல் காரணமாக, உக்ரைனின் ஆயுத இறக்குமதி 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக இருந்த இந்தியாவை உக்ரைன் பின்னுக்கு தள்ளியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.3 சதவீதமாக இருந்து வந்தது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக இந்தியா அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்தது. இதே காலகட்டத்தில் உக்ரைன் ஆயுத இறக்குமதி 8.8 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது உக்ரைன்.