Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடையை விதிக்கப்படும்: இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran World

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடையை விதிக்கப்படும்: இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை

EDITOR

வாஷிங்டன்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன. அதேவேளையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தீவிரமாக எடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.

இதன்காரணமாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என மார்க் ருட்டே கூறினார். ஏற்கனவே ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.

The post ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடையை விதிக்கப்படும்: இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!
  • நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
  • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

You Might Also Like

அமெரிக்காவில் இருந்து 5 பேர் ஆப்ரிக்காவுக்கு நாடு கடத்தல்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

July 16, 2025

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு லேசான நில அதிர்வு

July 18, 2025

பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

July 16, 2025

சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?