புதுடெல்லி: தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். சீனர்கள் நமது எல்லைக்குள் இருப்பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.