ராமேசுவரம்: சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 4 கோடி வரையிலும் ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் விமானம் மூலம் வருபவர்கள் முதலில் மதுரை, தூத்துக்குடி, திருச்சி வரையிலும் வந்து, அங்கிருந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் வரையிலும் கார், பேருந்து அல்லது ரயில் மூலம் பயணம் செய்து ராமேசுவம் வரவேண்டியுள்ளது.