ராமேஸ்வரம்: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.