புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்து 40 பந்துகளை 89 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். சுமார் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய ஆட்டமாக இது அமைந்தது. அதுவும் இம்பேக்ட் வீரர்கள் களம் கண்டார். தாக்கம் கொடுத்தார்.
அவரது கிரிக்கெட் வாழ்வையும், வாய்ப்புக்காக ஏங்கி நின்ற அவரது எதிர்பார்ப்பையும் கடந்த 2019-ல் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஜெர்ஸி’ பட கதையின் நாயகன் கதாபாத்திரத்துடன் ஒப்பிடலாம். அந்த அளவுக்கு ஆட்டத்தை அவர் நேசிக்கிறார். அதன் வெளிப்பாடு தான் ‘Dear Cricket, give me one march Chance.’ என சமூக வலைதளத்தில் கடந்த 2022-ல் அவர் பதிவிட காரணம். இப்போது வாய்ப்பு பெற்றார், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.