புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி அளித்த ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
அப்போது வான் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்தியது. தற்போது எல்லைப் பகுதியில் வான் பாதுகாப்பு கருவிகளை அதிகளவில் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.