சென்னை: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக ரூ.40 கோடியில் தரம் உயர்த்தும் பணி முடிவுற்று விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரைவையில் கேள்வி நேரத்தில், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் பேசும்போது, “தோகமலை ஒன்றியம் அ.உடையாப்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.