மும்பை: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் (எம்பிசி)கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. பணவீக்கம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.