சென்னை: “தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் மரங்கள் நடவும், மேற்கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன், “ரேஷன் கடைகளில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெயிலில் நின்று பொருட்கள் வாங்குகின்றனர். எனவே ரேஷன் கடைகள் முன்பு மரம் நட வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தரமாக மேற்கூரை அமைக்க வேண்டும்” என்றார்.