
புதுடெல்லி: சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களின் திறன், மகத்தான அனுபவத்தை புறக்கணிக்க முடியாது என இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். அவருடன், மற்றொரு சீனியர் பேட்ஸ்மேனுமான விராட் கோலியும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட உள்ளார்.

