ஹைதராபாத்: பெண் குழந்தைகள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்துகள் கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தனது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய சிரஞ்சீவி தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு, இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.