ராமேசுவரம்: அரபிக் கடலில் மூழ்கிய லைபீரியா நாட்டு சரக்கு கப்பலில் இருந்து, தனுஷ்கோடி கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் மூட்டைகளை தொட வேண்டாம் என பொது மக்களுக்கு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டன.