திருவனந்தபுரம்: வக்பு (திருத்தம்) சட்டத்தின் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியாதவது: முனம்பம் மக்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மிக நீண்ட காலமாக அங்கே வசித்து வருகிறார்கள். அங்குள்ள முக்கியமான பிரச்சினை அம்மக்கள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. நீண்டகாலமாக அங்கே வசித்து வருவதால் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு முன்னுரிமை அளித்தது. அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.