கொல்கத்தா: உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து வெளிவர வங்கதேசத்துக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.நாராயணன், "இந்தியாவுக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது. அதேநேரத்தில் அந்த வலிமை என்பது கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒரு பொறுப்பான மற்றும் பெரிய சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்.