புதுடெல்லி: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள தூதரகத்தில் இன்று (பிப். 5) முதல் விசா மற்றும் தூதரக சேவைகளை மீண்டும் தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, அகர்தலாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் ஈடுபட்டன. அப்போது, தூதரகத்துக்குள் நுழைந்த சிலர், அங்கிருந்த அந்நாட்டு தேசிய கொடியை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.