சிவகாசி: வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கும், உள்ளுக்குள் இருந்தே அவர்களுக்கு உதவும் மூன்றாம் படைகளுக்கும் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று திமுக பாசறைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
சிவகாசியில் திமுக மருத்துவர் அணி சார்பில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவுப் பாசறைப் பயிற்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் தலைமை வகித்தார்.