சென்னை: மாநகராட்சி வசூலிக்கும் வணிக உரிம கட்ணத்தை ரூ.1000 ஆக குறைக்க வேண்டும் என்று ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ரிப்பன் மாளிகையில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் தலைமையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை ரிப்பன் மாளிகையில் இன்று (பிப்.6) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “சென்னை மாநகராட்சி சார்பில் வணிக உரிம கட்டணம் ரூ.650-லிருந்து ரூ.3,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுக்கான உரிம கட்டணத்தை இப்போதே செலுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் நிர்பந்திக்கின்றனர்.