சென்னை: வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, செலவுகளை குறைக்க உதவும் வகையில், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு, சென்னையில் ஆக.9-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் உதவும் வகையில், தொழில்முனைவோர் சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஆகியோருக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.