புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக தீபாவளிக்குள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குறைந்த பட்சம் 5 சதவீதம், அதிகபட்சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.