சென்னை: வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லாத ஓட்டல்கள் எவை என போக்குவரத்து போலீஸார் நேற்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அதன்படி, 80 ஓட்டல்களில் வாகன நிறுத்தும் வசதி இல்லை என தெரியவந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதுஒருபுறம் இருக்க சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணியாலும் சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.