நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு அதே ஆண்டு முடித்து வைக்கப்பட்டு வி்ட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் நேற்று (ஜன.31) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.