அடுத்த 5 ஆண்டுகளில், அண்ணா பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளும், உலக அளவிலான கியூஎஸ் தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்ய புதிய செயல்திட்டம் வகுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கிளாஸ், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இணையவழி படிப்புகளை படிக்க ஏற்பாடு செய்யப்படும்.