சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். எனவே, சீமானுக்கு எதிரான புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது வளசரவாக்கம் போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.