நாமக்கல்: “தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும். வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்து வருவது சரியில்லை” என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக, நாம் தமிழர் அமமுக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது சரி தான். திமுகவுக்கு சரியான எதிர்க்கட்சி அதிமுகதான். யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். யாரை அமர வைக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.