
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய கெடுபிடியை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

