விருதுநகர்: விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பாஜக, இந்து முன்னணி அமைப்பினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய பேருந்து மற்றும் ரயில்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுமதியை மீறி திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இந்து முன்னணி அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்படும் வீட்டு காவலில் அடைக்கப்படும் வருகின்றனர்.