ஹைதராபாத்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநிலத்தின் குறிப்பிட்ட பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் கிடைக்கும்.
இது குறித்து தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: மதிப்பீட்டு சிக்கல்கள் காரணமாக வெப்ப அலை பாதிப்புகள் ஒரு மறைமுகமான ஆபத்தாகவே அறியப்படுகிறது. அதன் பாதிப்புகளும் குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் இறப்புகள் குறித்து மிகவும் குறைவான அளவிலேயே தகவல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினர்களான பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் பற்றிய தகவல்கள்.